மதுரையில் சம்பவம்: சாலையில் கிடந்த மனிதத் தலை!
மதுரையில் முக்கிய சாலையில் துண்டாகிக் கிடந்த மனிதத் தலையால் பரபரப்பு


மதுரை மாவட்டம் நாகனாகுளம் கண்மாய் அருகே நத்தம் சாலையில் உடல் இல்லாமல் தலை மட்டும் துண்டாகிக் கிடந்ததைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, விரைந்து வந்த காவல்துறையினர், தலையைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தலை கிடந்த இடத்துக்கு மோப்ப நாயை அழைத்து வந்த காவல்துறையினர் அது சென்ற வழித்தடத்தில் கிடைக்கும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துண்டாகிக் கிடந்த தலை 60 வயது முதியவரின் தலையாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாலையில் கிடந்த தலையை மீட்டு, அது யாருடையாது, கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...