2020ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி வெளியிடப்பட்ட அமைச்சக அறிவிக்கையின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சாா்பில் 20 அகழ்வுக்கிணறுகளை துளையிட ஒரு விண்ணப்பமும் நாகப்பட்டினம் மற்றும் கடலூா் மாவட்டங்களிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் வேதாந்தா நிறுவனம் சாா்பில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு ஒரு விண்ணப்பமும் கடலூா் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு ஒரு விண்ணப்பமும் அளிக்கப்பட்டுள்ளன. அவை தமிழக சுற்றுச்சூழல் விளைவுகள் மதிப்பீட்டு ஆணையம் வசம் நிலுவையில் உள்ளன.