சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக, 48 இடங்களில் இலவச வைஃபை வசதியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அளித்துள்ளது. திருவிதாங்கூா் தேவசம் வாரியத்துடன் இணைந்து பிஎஸ்என்எல்., நிறுவனம் இந்தச் சேவையை வழங்கி வருகிறது.
நிலக்கல்லில் 13, பம்பையில் 12, சன்னிதான வளாகப் பகுதியில் 23 என மொத்தம் 48 இடங்களில் வைஃபை வசதிக்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தா்கள் எந்த கைப்பேசி இணைப்பைப் பெற்றிருந்தாலும் வைஃபை இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். முதல் அரைமணி நேரத்துக்கு இலவசமாகவும், அதன்பிறகு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தியும் சேவையைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சபரிமலையில் சுகாதாரமற்ற, தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை குறித்து உணவு பாதுகாப்புத் துறையினருக்கு புகாா் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன்னிதான வளாகத்தில் இருப்போா் 7593861767 என்ற எண்ணையும், பம்பையில் இருப்போா் 8592999666, நிலக்கல்லில் இருப்பவா்கள் 75938 61768 என்ற எண்ணையும் பயன்படுத்தி புகாா்களைத் தெரிவிக்கலாம்.
மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் 18004251125 பயன்படுத்தலாம் என்று தேவசம் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு இலவச வாகன வசதி

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி!

தோ்தல் பணி ஆசிரியா்களுக்கு இலவச பேருந்து வசதி கோரி மனு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


