மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் ரூ. 3,000 கோடியில் விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள்!!

தமிழகத்தில் நடைபெறும் விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள் பற்றி...

News image
சென்னை விமான நிலையம்- Express
Updated On :29 நவம்பர் 2024, 6:10 am

DIN

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் ரூ. 2,990.75 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

தமிழக விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மயிலாடுதுறை எம்பி சுதா மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தரப்பில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மொத்தமாக ரூ. 2,990.75 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “சென்னை விமான நிலைய நவீனமயமாக்கலின் இரண்டாவது கட்டமானது ரூ. 2,467 கோடியிலும், இரண்டாம் ஓடுதள பாதை மற்றும் இதரப் பணிகள் ரூ. 53.66 கோடியில் நடைபெறுகிறது.

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கப்படும் பகுதிகளில் வெள்ள நீர் வடிகால் பணிகள் ரூ. 209.10 கோடியிலும், முனையம் 1 மற்றும் 4 மறுசீரமைப்பு பணிகள் ரூ. 81.80 கோடியிலும் நடைபெற்று வருகின்றன.

அதேபோல், மதுரை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை கட்டுமானப் பணிகள் 99.02 கோடியிலும், திருச்சியில் புதிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் ரூ. 80.17 கோடியிலும் கட்டப்பட்டு வருகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.