லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குடியரசுத் தலைவரின் திருவாரூர் வருகை ரத்து

திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதாக இருந்த, குடியரசுத் தலைவரின் வருகை ஃபென்ஜால் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
திரௌபதி மு‌ர்மு- கோப்புப்படம்.
Updated On :29 நவம்பர் 2024, 2:17 pm

DIN

திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதாக இருந்த, குடியரசுத் தலைவரின் வருகை ஃபென்ஜால் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 34 பேர் தங்கப்பதக்கம், 22 பேர் முனைவர் பட்டம் என 614 பேர் பட்டம் பெற உள்ளனர். பல்கலைக்கழக வேந்தர் கோ.பத்மநாபன் தலைமையில் நடைபெறும் விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் மு.கிருஷ்ணன், அறிக்கை வாசிக்கிறார்.

இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தங்கப் பதக்கம் பெறும் 34 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி திருவாரூரில் 3 அடுக்கு பாதுகாப்புடன் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவாரூர் நகரம், மத்திய பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்ளிட்டவை போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, கூடுதலாக தமிழ்நாடு பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இதனிடையே தற்போது உருவாகியுள்ள ஃபென்ஜால் புயல் காரணமாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழவில், வேந்தர் கோ.பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அனைவருக்கும் பட்டங்களை வழங்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.