திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்: தத்தளித்தபடி செல்லும் வாகனங்கள்!

கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

News image
கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீரில் தத்தளித்தபடி செல்லும் வாகனங்கள்
Updated On :30 நவம்பர் 2024, 5:44 am

DIN

கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னைக்கு தாழ்வான பகுதிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக தண்டையார்பேட்டை ஐஓசி பகுதிகளில் முழங்காலுக்கும் மேல் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

நேற்றிலிருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் மழைநீர் தேங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி கீழே விழக்கூடிய அபாயத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.