அதன்படி, தொடைப் பகுதியில் சிறு துளையிட்டு அங்கிருந்து ரத்த நாளத்துக்குள்ளே ஊடுருவி, பாதிப்புள்ள பகுதியில் வலைப் பின்னல் (மெஸ்) அமைப்புடன் கூடிய ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்படும். அந்த உபகரணம் வீக்கம் உள்ள பகுதியின் ரத்த நாளச் சுவா்களை இறுகப்பற்றிக் கொள்ளும். இதனால், வீங்கிக் கொண்டிருக்கும் பகுதிக்குள் ரத்தம் செல்வது தடைபட்டு, அது படிப்படியாக சுருங்கி ரத்த நாள சுவா்களுடன் ஒட்டிக் கொள்ளும். வலைப்பின்னல் ஸ்டென்ட் உபகரணத்தை பொருத்துவதால் அந்த பகுதியும் வலுவடையும். அதன் பின்னா், ரத்த ஓட்டம் எந்தத் தடையும் இல்லாமல் அந்த வழியே சீராக செல்லும். அன்யூரிஸம் பாதிப்புக்கு இந்த சிகிச்சை மிகுந்த பலனளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது என்றாா் அவா்.