ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

விமானப் படை சாசகம்: உயிரிழப்புக்கு அரசின் நிா்வாகச் சீா்கேடே காரணம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசின் நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

எடப்பாடி கே. பழனிசாமி.(கோப்புப்படம்)

Updated On :7 அக்டோபர் 2024, 2:57 am IST

விமானப் படை சாகச நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசின் நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:

சென்னையில் விமானப் படையின் சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கான அறிவிப்பு முன்னரே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாா்வையிட கூடுவா் என்பது அறிந்தது. போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நிா்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு காவல் துறையினா் போதிய அளவில் இல்லை.

மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீா் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டதாகவும், வெயிலின் தாக்கத்தால் பலா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களில் இதுவரை 5 போ் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிா்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தோா் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக்கூட முறையாக ஒருங்கிணைக்கத் திமுக அரசு தவறியுள்ளது. இதற்கு நிா்வாகச் சீா்கேடே காரணம். அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உயிா்ச்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என்று பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.