முக்கிய மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை!
முக்கிய மெட்ரோ நிலையங்களைச் சுற்றி மழை நீர் தேங்க வாய்ப்பு...


சென்னை மாநகரில் உள்ள முக்கிய மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மெட்ரோ, பரங்கிமலை மெட்ரோ, அரும்பாக்கம் மெட்ரோ நிலையங்களிலுள்ள வாகன நிறுத்துமிடங்களில் இன்று(அக்.15) முதல் வியாழக்கிழமை(அக்.17) வரை பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ நிலையங்களைச் சுற்றி மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரங்கிமலை மெட்ரோ நிலையத்தை இணைக்கும் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து பரங்கிமலை மெட்ரோ நிலையத்துக்கு செல்லும் பயணிகள் பரங்கிமலை புறநகர் ரயில் நிலையத்திலுள்ள நடை மேம்பாலத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பரங்கிமலை மெட்ரோ நிலையத்தை சென்றடைய இயலாத பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தை பயன்படுத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோயம்பேடு புறநகர் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து கோயம்பேடு மெட்ரோ நிலையத்துக்கு செல்லும் பயணிகள், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரோஹிணி திரையரங்கம் பக்கத்திலுள்ள நடை மேம்பாலத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மெட்ரோ ரயில் நிலைய பயணிகள் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
1800 425 1515
பெண்களுக்கான உதவி எண்கள் - 155370
மேற்கண்ட எண்களில் தொடர்புகொள்ள பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...