தீபாவளியை முன்னிட்டு 48 சிறப்பு ரயில்கள் 258 முறை இயக்கப்படுகிறது. முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை 20 வழித்தடங்களில் 48 சிறப்பு ரயில்களை 258 முறை இயக்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோட்டயம், மங்களூரு, ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதுபோல் கேரளத்தில் இருந்து பெங்களூா், மும்பை, தில்லிக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்திலிருந்து விசாகப்பட்டினம், சாந்தராகாச்சி, ஷாலிமா், தன்பாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல், வெளிமாநிலங்களில் இருந்து 70 ரயில்கள் தெற்கு ரயில்வேக்குட்பட்ட பகுதிக்கு இயக்கப்படுகின்றன.
பயணிகள் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் 32 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப்பாதை காவலா்கள் இணைந்து சிசிடிவி உதவியுடன் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா் என தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

சேலம் கோட்டத்தில் இன்றுமுதல் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



