ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்றும் பாஜக அரசால் இதனை செயல்படுத்த முடியாது என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின்

Updated On :19 செப்டம்பர் 2024, 12:50 pm IST

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்றும் பாஜக அரசால் இதனை செயல்படுத்த முடியாது என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று(செப். 18) ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு பாஜக அல்லாத மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாதது. இந்தியாவின் பல வேறுபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களை புறக்கணிப்பதுடன் கூட்டாட்சித் தத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாகும்.

தேர்தல் பணிகள், பிராந்திய பிரச்சினைகள் மற்றும் நிர்வாக முன்னுரிமைகள் ஆகியவற்றில் உள்ள பரந்த வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டால் இது முற்றிலும் சாத்தியமற்றது.

இது ஆட்சியின் இயல்பான போக்கை சீர்குலைக்கும், அனைத்து அலுவலக விதிமுறைகளிலும் சீரமைப்பு தேவைப்படும்.

இந்த முன்மொழிவு என்பது பாஜகவின் அகங்காரத்தை திருப்திபடுத்தும் ஒரு நடவடிக்கைதான். ஆனால், அவர்களால் அதை ஒருபோதும் செயல்படுத்த முடியாது. ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப, இந்தியாவின் ஜனநாயகத்தை வளைக்க முடியாது.

இதுபோன்ற திசைதிருப்பும் தந்திரங்களில் ஆற்றலை வீணாக்காமல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களை சமமாக விநியோகித்தல் போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல்

மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் சமர்பித்தது.

18,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், மக்களவை மற்றும் பேரவைகளுக்கு ஒரே நேரத்திலும், அடுத்த 100 நாள்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் என இரு கட்டங்களாக தோ்தலை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகள், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மன்றங்களில் விவாதிக்கப்படும். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக இக்குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்ல செயலாக்கக்குழு அமைக்கப்படும் என்று  மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மேலும், வருகின்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.