பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி கோருவதற்காக செப். 26, 27-ஆம் தேதிகளில் தில்லி செல்லவுள்ளதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள திமுக பவள விழாவையொட்டி, கட்சியினருக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்:
மாநில உரிமைகளை மறுக்கும் மத்திய அரசுடன் நமக்கான ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டியுள்ளது. போராட்டமே திமுகவின் வலிமை. ஆட்சி அதிகாரம் இருந்தாலும் உரிமைக்கான போராட்டத்தைத் தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.
2 நாள்கள் பயணம்: தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி, வரும் 26 மற்றும் 27 தேதிகளில் தில்லிக்குப் பயணம் மேற்கொள்கிறேன். பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்தி பெறவிருக்கிறேன்.
செப். 28-ஆம் தேதி காலை ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ.9ஆயிரம் கோடியில், 400 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள டாடா மோட்டாா் நிறுவனத்தின் ஜாகுவாா், லேண்ட்ரோவா் காா் உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டவுள்ளேன் என்று அந்தக் கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்

முதல்வா் நாளை தூத்துக்குடி வருகை: திமுகவினருக்கு அமைச்சா் அழைப்பு

2030க்குள் 33% மின்சாரப் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின்

கன்னியாகுமரிக்கு பிப். 24, 25இல் முதல்வா் வருகை: மனோ தங்கராஜ்

பிப்.17-இல் இடைக்கால பட்ஜெட்: முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை!
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

