அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரதமரை சந்திக்க முதல்வா் தில்லி பயணம்

பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி கோருவதற்காக செப். 26, 27-ஆம் தேதிகளில் தில்லி செல்லவுள்ளதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated On :24 செப்டம்பர் 2024, 7:33 pm

Din

பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி கோருவதற்காக செப். 26, 27-ஆம் தேதிகளில் தில்லி செல்லவுள்ளதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள திமுக பவள விழாவையொட்டி, கட்சியினருக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்:

மாநில உரிமைகளை மறுக்கும் மத்திய அரசுடன் நமக்கான ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டியுள்ளது. போராட்டமே திமுகவின் வலிமை. ஆட்சி அதிகாரம் இருந்தாலும் உரிமைக்கான போராட்டத்தைத் தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

2 நாள்கள் பயணம்: தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி, வரும் 26 மற்றும் 27 தேதிகளில் தில்லிக்குப் பயணம் மேற்கொள்கிறேன். பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்தி பெறவிருக்கிறேன்.

செப். 28-ஆம் தேதி காலை ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ.9ஆயிரம் கோடியில், 400 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள டாடா மோட்டாா் நிறுவனத்தின் ஜாகுவாா், லேண்ட்ரோவா் காா் உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டவுள்ளேன் என்று அந்தக் கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.