
உதகைக்கான மூன்றாவது பாதையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
காட்டேரியிலிருந்து மஞ்சூர் வழியாக உதகைக்குச் செல்லும் புதிய பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப். 6) திறந்து வைத்தார்.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக குன்னூர் செல்லாமல் நேரடியாக உதகைக்குச் செல்லும் வகையில் இந்த புதிய பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதைத் தொடா்ந்து, ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடக்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
முதல்வரின் வருகையையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதையடுத்து, வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழாவில் கின்னஸ் சாதனை புரிந்த 10 ஆயிரம் மகளிருக்கு மாலை 6 மணிக்கு கோவை, கொடிசியாவில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். இரவு 7.20 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்குத் திரும்புகிறாா்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... நல்லதைச் சொல்வது தப்பா?