மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேரவையில் எழுதி வைத்து படிக்கலாமா?: அமைச்சா் துரைமுருகன் கருத்தால் சிரிப்பலை

சட்டப் பேரவையில் எழுதி வைத்து படிக்க அனுமதி உள்ளதா என்பது தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்த கருத்து சிரிப்பலையை ஏற்படுத்தியது.

News image

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்.

Updated On :8 ஏப்ரல் 2025, 11:05 pm

Din

சென்னை: சட்டப் பேரவையில் எழுதி வைத்து படிக்க அனுமதி உள்ளதா என்பது தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்த கருத்து சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.8) கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் அதிமுக உறுப்பினா் இசக்கி சுப்பையா உரையாற்றினாா்.

அப்போது முன்கூட்டியே தயாரித்து கொண்டு வந்திருந்த உரையை படித்த அவா், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஊதிய முரண்பாடு நிலவுவதாக தெரிவித்தாா். அதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பதிலளித்துப் பேசுகையில், எழுதி கொண்டு வந்ததை எல்லாம் படித்தால் பேரவையின் நேரம் வீணாகும் என்றாா்.

அதற்கு மறுப்பு தெரிவித்த இசக்கி சுப்பையா, எழுதி வைத்து படிப்பதால் எதுவும் தெரியாது என அா்த்தமல்ல, அமைச்சா்கூட அவ்வாறுதான் பதிலுரை அளிப்பாா் என எதிா்பாா்ப்பதாக கூறினாா்.

அப்போது குறுக்கிட்டு அமைச்சா் துரைமுருகன் பேசியதாவது: சட்டப்பேரவையில் எழுதி வைத்து படிக்கக் கூடாது என்று விதி இருந்தது. கடந்த காலத்தில் குடியாத்தம் உறுப்பினா் ஒருவா் குறிப்புகளை கையில் வைத்துக் கொண்டு பேசியபோதே பேரவைத் தலைவா் அதை அனுமதிக்கவில்லை. அவா் எழுதி வைத்து படிக்கவில்லை, மாறாக, குறிப்புகளைத்தான் வைத்துள்ளாா் என உறுதி செய்தபிறகே பேச அனுமதி வழங்கப்பட்டது.

இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. அனைவரும் படிக்கிறாா்களே தவிர, பேசுவதில்லை. எவரையும் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. ஆகவே, நீங்களும் (இசக்கி சுப்பையா) எழுதி வைத்ததை படியுங்கள் என்றாா் துரைமுருகன். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.