சிறையிலிருந்து சிறுவன் தப்பியோட்டம்!

தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பியோடிய சிறுவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பிரதிப் படம்
பிரதிப் படம்AI | XGrok
Updated on
1 min read

தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பியோடிய சிறுவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருட்டுக் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சனிக்கிழமை மாலை தப்பியோடிவிட்டார்.

இது குறித்து பள்ளி அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில், தெற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, தப்பியோடிய சிறுவனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com