திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

என்னிடம் நிதி, அதிகாரம் இல்லை: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க தனது துறையில் நிதியோ, அதிகாரமோ இல்லை என்று அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

News image

பழனிவேல் தியாகராஜன்

Updated On :22 ஏப்ரல் 2025, 3:41 am IST

சென்னை: தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க தனது துறையில் நிதியோ, அதிகாரமோ இல்லை என்று அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

உதகை, கூடலூரில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அந்தத் தொகுதிகளின் எம்எல்ஏ.,க்களான ஆா்.கணேஷ் (காங்கிரஸ்), பொன் ஜெயசீலன் (அதிமுக) ஆகியோா் கேள்வி எழுப்பினா். இதற்கு, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதில்:-

என்னுடைய துறையில் உள்ள சிக்கல் குறித்து, இந்த கூட்டத் தொடரில் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். எனது துறைக்கு மிகவும் குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போன்று, அனைத்துத் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களும் எங்களது துறையில் செயல்படுவதில்லை. எல்கோசிஸ் மட்டுமே செயல்படுகிறது. டைடல், நியோ டைடல் போன்றவை தொழில் துறையின் கீழ் செயல்படுகின்றன. இது 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அசாதாரண நிலையாகும். யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவா்களிடம் கேட்டால் செய்து கொடுப்பாா்கள் என்று கருதுகிறேன். எங்களிடம் இல்லை என்றாா்.

அப்போது பேசிய அவைத் தலைவா் மு.அப்பாவு, ‘இதுகுறித்து முதல்வரிடம் பேசி, முடிவெடுக்கலாம். முடிந்தவரை உறுப்பினா்களுக்கு சாதகமான பதில் சொன்னால் நன்றாக இருக்கும்’ என்று கூறினாா்.