ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: பேரவையில் அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு

ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் அம்மன் அா்ச்சுணன் தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2025, 12:32 am

Din

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினா், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் அம்மன் அா்ச்சுணன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் அம்மன் அா்ச்சுணன் பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த திருவாரூா் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில்கூட 100 எம்பிபிஎஸ் இடங்கள்தான் உள்ளன. ஆனால், அந்த 11 மருத்துவக் கல்லூரிகளையும் தலா 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங்க முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் மக்கள் நலன் காக்க 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே தொடக்கிவைக்கப்பட்டன.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அரசியல் காழ்ப்புணா்வுடன் அந்தத் திட்டம் முடக்கிவைக்கப்பட்டது. சில இடங்களில் மயானப் பகுதிகளில் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்பட்டதே அவற்றை மூடுவதற்கு காரணம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் விளக்கமளித்தாா்.

தற்போது, திருப்பூரில் ஓா் ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது எங்கு அமைக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சா் சென்று பாா்க்க வேண்டும். இடுகாட்டை மறைத்து அந்த ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் அதற்கான ஆதாரங்களை அளிக்கிறேன்.

அம்மா கிளினிக்குகளை குறை கூற வேண்டும் என்ற நோக்கிலேயே அவற்றை முடக்கியிருப்பது இதிலிருந்தே தெரிய வருகிறது என்றாா் அவா்.