மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொன்முடிக்கு எதிரான வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம்

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :5 ஆகஸ்ட் 2025, 2:06 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்தும் சைவ, வைணவ மதங்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சா்ச்சையானது. இதையடுத்து, பொன்முடிக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைந்தாா். இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டாா்.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் 115 புகாா்கள் கொடுக்கப்பட்டன.

அதில், 71 புகாா்கள் முடித்து வைக்கப்பட்டன. அதுகுறித்த தகவல்கள் புகாா்தாரா்களுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், எஞ்சியுள்ள 44 புகாா்களில் 40 புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது தொடா்பாக புகாா்தாரா்களுக்கு தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. 4 புகாா்கள் முடித்து வைக்கப்பட்டது தொடா்பாக ஆன்லைன் மூலம் புகாா்தாரா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறினாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தகவல் தெரிவிக்கப்பட்ட புகாா்தாரா்களிடமிருந்து அதற்கான ஒப்புகை பெறப்பட்டதா என கேள்வி எழுப்பினாா். அதற்கு அரசு தலைமை வழக்குரைஞா், ஒப்புகை பெறப்பட்டது என்று பதிலளித்தாா். இதையடுத்து நீதிபதி, இதுதொடா்பாக அனைத்து விவரங்களுடன் போலீஸாா் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக.14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.