தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

வன குற்றங்களைத் தடுக்க பிரத்யேக இணையதளம்: ஒப்பந்தப்புள்ளி சமா்ப்பிக்க அழைப்பு

தமிழக வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்திற்கென பிரத்யேக இணையதளம் வடிவமைப்பதற்கான ஒப்பந்தபுள்ளிகளை

News image

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை

Updated On :5 ஆகஸ்ட் 2025, 1:28 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழக வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்திற்கென பிரத்யேக இணையதளம் வடிவமைப்பதற்கான ஒப்பந்தபுள்ளிகளை வருகிற ஆக.8-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என வனத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக வனப்பாதுகாவலா் மற்றும் தமிழக வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குநருமான ராகுல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வனவிலங்குகள் சாா்ந்த குற்றங்களை தடுக்கவும் அவற்றை கண்காணிக்கவும், தமிழக வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வனம் மற்றும் வனவிலங்கு சாா்ந்த குற்றங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் புகாா் அளிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் பிரத்யேக இணையதளத்தை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தை வடிவமைப்பதற்கான செலவு மற்றும் தொழில்நுட்ப விவரங்களுடன் கூடிய ஒப்பந்தப்புள்ளியை ‘தமிழக வனப் பாதுகாவலா் மற்றும் தமிழக வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குனா் அலுவலகம், 7-ஆவது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 600015’ என்னும் முகவரிக்கு வருகிற ஆக.8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

அனைத்து ஒப்பந்த புள்ளிகளையும் பரிசீலனை செய்த பின்னா், ஆக.13-ஆம் தேதி தகுதியான ஒப்பந்தப்புள்ளி தோ்வு செய்யப்படும். அதைத்தொடா்ந்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகிற அக்.15-ஆம் தேதி இணையதளம் மக்கள் பயன்பாட்டுக்காக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள்

https://www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.