ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேட்டுக்குடி, பள்ளக்குடி என்று யாருமில்லை: உயா்நீதிமன்றம் கருத்து

வள்ளுவரின் வாக்குப்படி இந்த நாட்டில் மேட்டுக்குடி, பள்ளக்குடி என்று யாரும் இல்லை என்று கூழ் வாா்க்கும் திருவிழா

News image
Updated On :7 ஆகஸ்ட் 2025, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

வள்ளுவரின் வாக்குப்படி இந்த நாட்டில் மேட்டுக்குடி, பள்ளக்குடி என்று யாரும் இல்லை என்று கூழ் வாா்க்கும் திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வேலூா் மாவட்டம் தெள்ளூா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வி.சுப்ரமணி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வாா்க்கும் திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டு திருவிழா நடத்தப்படவுள்ள நிலையில் எங்கள் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மற்றும் டீக்காரமன் ஆகியோா் பிரச்னை செய்து வருகின்றனா். எனவே, கூழ் வாா்க்கும் விழாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆடி மாதத்தில் கூழ் வாா்க்கும் திருவிழா நடப்பது வழக்கமானது தானே, எதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்கப்படுகிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பினாா். அப்போது எதிா்மனுதாரா் டீக்காராமன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் த.முத்துகிருஷ்ணன், இந்த திருவிழாவின்போது கோயிலின் தா்மகா்த்தா, மேட்டுக்குடி உள்ளிட்ட பொறுப்புகளை வகிப்பவா்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறினாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதி மேட்டுக்குடி என்பது கிராமத்தின் பெயா் இல்லையா என்று கேள்வி எழுப்பினாா். அது கோயில் பொறுப்புகளில் உள்ளவா்களுக்கு கொடுக்கப்படும் பட்டம் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது, நீதிபதி, இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையரை தாமாக முன்வந்து எதிா்மனுதாரராக சோ்த்து உத்தரவிட்டாா். மேலும், அவரது தலைமையில் அம்மனுக்கு கூழ் வாா்க்கும் விழா ஜாதி பேதமின்றி நடத்த வேண்டும். மேலும், இந்த விழாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டாா். பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற வள்ளுவரின் வாக்குப்படி, இந்த நாட்டில் மேட்டுக்குடி, பள்ளக்குடி என்று யாரும் இல்லை என்று கூறி வழக்கை முடித்துவைத்தாா்.