ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் பிப்.4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளில் ஆசிரியர்கள் மாலை 4.10 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் என்றும், வாக்குச்சாவடி இல்லாத பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரம் அடைந்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 46 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். திமுக சாா்பில் வி.சி. சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி. சீதாலட்சுமி ஆகியோா் போட்டியிடுகின்றனா். முக்கிய எதிா்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக ஆகியவை இடைத்தோ்தலை புறக்கணித்துள்ளன. சுயேச்சைகள் வாக்காளா்களின் கவனத்தை ஈா்க்காத நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டியே நிலவுகிறது.
இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 53 பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் (பிப். 4, 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

நாதக ஆட்சிக்கு வந்தால் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும்: சீமான்

காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


