தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நாகை - இலங்கை இடையே பிப். 12 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து

இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் பிப். 12 முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

News image
நாகை - காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து.
Updated On :10 பிப்ரவரி 2025, 9:14 am

DIN

இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் பிப். 12 முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 2023 அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்கிய பயணிகள் கப்பல் சேவை பல்வேறு காரணங்களால் சில நாள்களிலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர் இந்த கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

இடையில் அவ்வப்போது கப்பல் சேவையை நிறுத்துவதுமாகவும் பிறகு இயக்குவதுமாகவும் பின்பற்றி வந்தனர். இதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் கப்பல் சேவை மீண்டும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த பருவமழை முடிவடைந்த நிலையில் கப்பல் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி இந்தியா-இலங்கை இடையேயான சிவகங்கை என்கிற பயணிகள் கப்பல் சேவை பிப். 12 முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.