இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கழுத்தில் கட்டி: நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவன் மரணம்! உறவினர்கள் போராட்டம்

கழுத்தில் கட்டியுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மரணமடைந்தார்.

News image
உறவினர்கள் போராட்டம்
Updated On :13 பிப்ரவரி 2025, 8:18 am

DIN

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தென்காசியைச் சேர்ந்த சிறுவன் திடீரென உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் டீன் அலுவலகத்தை 2-வது நாளாக முற்றுகையிட்டு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தார்கள் என்ற தகவலில் உண்மையில்லை. 100 சதவீதம் சிறுவனை காப்பாற்ற முயன்றார்கள் என்று மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறியுள்ளார்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தென்காசியைச் சேர்ந்த சிறுவன் திடீரென உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் டீன் அலுவலகத்தை 2 வது நாளாக முற்றுகையிட்டு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தார்கள் என்ற தகவலில் உண்மை இல்லை. 1000 சதவீதம் சிறுவனை காப்பாற்ற முயன்றார்கள் என்றும் தெரிவித்தார்.

நெல்லை அரசு மருத்துவமனையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடம் மலையடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன் (39) தனது 3வது மகன் பொன்மாறன்(4) என்ற சிறுவனுக்கு கழுத்தில் சிறிய கட்டி இருந்ததால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10ம்தேதி குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இந்நிலையில் நேற்று காலை சிறுவனுக்கு ஸ்கேன் எடுப்பதற்காக ஊசி போடப்பட்டுள்ளது. அதன்பிறகு திடீரென சிறுவன் உடல்நிலை குறைவால் இறந்ததாக கூறப்பட்டது. இதைதொடர்ந்து மருத்துவமனை டீன் அலுவலகம் முன் அமர்ந்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சிறுவனின் உறவினர்கள் கூறுகையில், சிறுவனின் கழுத்தில் இருந்த கட்டியை குணப்படுத்த அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 10ம்தேதி ஸ்கேன் எடுக்கச் சென்ற மையத்தில் இருந்த மருத்துவ ஊழியர் ஒருவர் சிறுவனுக்கு ஊசி போட்டுள்ளனர். அதன்பின்னர் திடீரென சிறுவனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.

ஸ்கேன் மையத்தில் டாக்டர்கள் யாரும் இல்லை. ஆகவே சிறுவன் இறந்தது அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் என குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர் . அப்போது உயிரிழந்த சிறுவன் பொன்மாறனை வளர்த்தப் பாட்டி கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க செய்தது. தொடர்ந்து 2வது நாளாக இன்று காலையிலும் சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.