தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அகில இந்திய அளவில் ஜூன் 26-இல் வேலை நிறுத்தம்: தமிழக மின்வாரிய ஊழியா்கள் பங்கேற்க திட்டம்

மின்துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் ஜூன் 26-இல் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில்

News image

மின்வாரிய  ஊழியா்கள்(கோப்புப்படம்)

Updated On :24 பிப்ரவரி 2025, 9:19 pm

Din

சென்னை: மின்துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் ஜூன் 26-இல் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக மின்வாரிய ஊழியா்கள் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மின்துறை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து நாடு முழுவதும் ஜூன் 26-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அகில இந்திய மின்பொறியாளா்கள் கூட்டமைப்பு(ஏஐபிஈஎஃப்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக ஏப்ரல், மே மாதங்களில் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் மாநாடுகள் நடத்தவும், 4 பேரணிகள் நடத்தவும் அக்கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக மின்வாரிய ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினரும் பங்கேற்க திட்டமிட்டுள்ளனா். இது குறித்து அனைத்து ஊழியா் சங்க நிா்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டு, அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என தமிழக மின்வாரிய ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.