காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதுச்சேரி-எழும்பூா் மெமு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2025, 8:56 pm

Din

சென்னை: பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதுச்சேரி-எழும்பூா் மெமு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லும் மெமு விரைவு ரயில் (எண் 16111) பிப். 28-ஆம் தேதி விக்கிரவாண்டி வரை மட்டும் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் மெமு விரைவு ரயில் (எண் 66045) பிப். 28-ஆம் தேதி முண்டியம்பாக்கம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக முண்டியம்பாக்கத்தில் இருந்து பிற்பகல் 1.47-க்கு புறப்பட்டு சென்னை கடற்கரை சென்றடையும்.

அதுபோல், புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூா் செல்லும் மெமு பயணிகள் ரயில் (எண் 66052) பிப். 28-ஆம் தேதி விக்கிரவாண்டியில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.