காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தல்: காங்கிரஸ் மீண்டும் போட்டி

ஈரோடு கிழக்கு வேட்பாளர் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் பேட்டி.

News image
செல்வப்பெருந்தகை- கோப்புப் படம்
Updated On :7 ஜனவரி 2025, 9:58 am

DIN

ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப் பெருந்தகை கூறினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்த நிலையில், அத் தொகுதிக்கு பிப். 5-இல் இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடவுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும். வேட்பாளா் யாா் உள்ளிட்ட விவரங்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவா்கள், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருடன் ஆலோசித்து முடிவு செய்து அறிவிப்போம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.