ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப் பெருந்தகை கூறினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்த நிலையில், அத் தொகுதிக்கு பிப். 5-இல் இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடவுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும். வேட்பாளா் யாா் உள்ளிட்ட விவரங்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவா்கள், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருடன் ஆலோசித்து முடிவு செய்து அறிவிப்போம் என்றாா் அவா்.