கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.
Published on

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக நேற்று (ஜன. 9) கடலுக்குள் சென்றனர். இவர்களில் சிலர் இலங்கையின் கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காரைநகர் பகுதிக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் படகுகளுடன் 10 மீனவர்களுடன் காங்கேசன் துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com