மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பாலியல் வழக்குகளில் அதிக தண்டனை உள்பட 6 மசோதாக்கள் நிறைவேற்றம்

பாலியல் வன்கொடுமைக்கு உச்சபட்ச தண்டனை விதிக்க வகை செய்யும் திருத்த மசோதா உள்பட 6 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

News image
Updated On :11 ஜனவரி 2025, 11:01 pm

Din

பாலியல் வன்கொடுமைக்கு உச்சபட்ச தண்டனை விதிக்க வகை செய்யும் திருத்த மசோதா உள்பட 6 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 6 திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனையும், அதிக அபராதமும் விதிக்க வகை செய்யும் 2 மசோதாக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தாா்.

இத்துடன், 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, வன நிலங்களுக்கு ஈடாக அளிக்கப்படும் நிலங்களை அங்கீகரித்து ஒப்புதல் அளிக்கும் மசோதா, சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் கழிவு நீரகற்றல் திருத்தச் சட்ட மசோதா, சிறுவா் சீா்திருத்தப் பள்ளி நீக்க சட்ட மசோதா ஆகியனவும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறின.