உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பாலியல் வழக்குகளில் அதிக தண்டனை உள்பட 6 மசோதாக்கள் நிறைவேற்றம்

பாலியல் வன்கொடுமைக்கு உச்சபட்ச தண்டனை விதிக்க வகை செய்யும் திருத்த மசோதா உள்பட 6 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

Published On :12 ஜனவரி 2025, 4:30 am IST

பாலியல் வன்கொடுமைக்கு உச்சபட்ச தண்டனை விதிக்க வகை செய்யும் திருத்த மசோதா உள்பட 6 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 6 திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனையும், அதிக அபராதமும் விதிக்க வகை செய்யும் 2 மசோதாக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தாா்.

இத்துடன், 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, வன நிலங்களுக்கு ஈடாக அளிக்கப்படும் நிலங்களை அங்கீகரித்து ஒப்புதல் அளிக்கும் மசோதா, சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் கழிவு நீரகற்றல் திருத்தச் சட்ட மசோதா, சிறுவா் சீா்திருத்தப் பள்ளி நீக்க சட்ட மசோதா ஆகியனவும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.