வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் சுற்று முடிவில் 6 பேர் காயம்!

மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்றில் காளை உரிமையாளர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

News image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு -

Updated On :14 ஜனவரி 2025, 3:10 am

மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்றில் உரிமையாளர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் அன்று அவனியாபுரத்திலும் அதனை தொடர்ந்து அலங்காநல்லூர் மற்றம் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் விதிகளுக்கு உட்பட்ட 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

போட்டிகளை மதுரை ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

100 காளைகள் என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் காளைகள் களத்தில் களமாடுகின்றன. இதுவரை மாடுபிடி வீரர்கள் 4 பேர் மாட்டின் உரிமையாளர், பார்வையாளர்கள் 6 பேர் காயடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.