பரந்தூர் விமான நிலையத் திட்டம் மக்கள் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்ணூரில் 1546 குடும்பங்கள், பரந்தூரில் 1005 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருவதாகவும்,
பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பெரியளவில் வளர்ச்சி பெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பரந்தூர் பகுதி நீர்நிலைகளை எந்த அளவில் சீர்செய்ய முடியும் என்பதை ஆராய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம் மாற்றி அமைக்கப்படும்: தமிழக அரசு தகவல்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுமா? முதல்வர் விஜய் ஆலோசனை

விஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?

விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



