மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பரந்தூர் விமான நிலையம்: தமிழக அரசு விளக்கம்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் மக்கள் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜனவரி 2025, 3:40 pm

DIN

பரந்தூர் விமான நிலையத் திட்டம் மக்கள் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்ணூரில் 1546 குடும்பங்கள், பரந்தூரில் 1005 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருவதாகவும்,

பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பெரியளவில் வளர்ச்சி பெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பரந்தூர் பகுதி நீர்நிலைகளை எந்த அளவில் சீர்செய்ய முடியும் என்பதை ஆராய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.