தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோயில் காவலாளி கொலை: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News image

காவல்துறை விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமார்

Updated On :3 ஜூலை 2025, 9:04 pm

Din

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடா்பாக அறிக்கை அளிக்கும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயிலில் காவலராகப் பணியாற்றியவா் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலா்கள் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதுதொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி-க்கு, ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளாா்.