இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வெள்ளை சட்டையுடன் 4 ரீல்ஸ் போட்டால் தலைவனா? யாரைச் சொல்கிறார் அண்ணாமலை?

ஒரு தலைவனுக்கு பழிவாங்கும் நோக்கு இருக்கக் கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல்

News image
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை- X| K.Annamalai
Updated On :12 ஜூலை 2025, 12:16 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஒரு தலைவனுக்கு பழிவாங்கும் நோக்கு இருக்கக் கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை உத்தண்டியில் இன்று நடைபெற்ற அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இன்றைய அரசியலில் வருவோர் போவோர் எல்லாம் தலைவர் ஆகிவிடுகின்றனர். கையில் மைக்கை வைத்துக் கொண்டு, வெள்ளைச் சட்டையுடன் 4 ரீல்ஸ் போட்டால், அவர்களும் தலைவர்கள் ஆகிவிடுகின்றனர். ஆனால், இதே தமிழகத்தில்தான் காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் இருந்தனர்.

நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் மாற்றத்தை முதலில் உங்களுக்குள் நீங்கள் ஏற்படுத்த வேண்டும். உங்களின் பதவி ஒன்றும் உங்கள் அதிகாரத்தைத் தீர்மானிக்காது; உங்களின் செயல்களே தீர்மானிக்கும். எந்தப் பதவியானாலும். ஒருநாள் இல்லாமல்தான் போகும். அதுதான் இயல்பு. தகுதி, திறமையை வளர்த்துக் கொண்டால், உங்களுக்கான பதவியே உங்களைத் தேடி வரும்.

அதிகாரத்துக்கு வந்ததும் தன்னை அவமதித்தவர்களைக்கூட பழிவாங்கும் எண்ணாமல் இருப்பவர்தான் சிறந்த தலைவராக வருவார் என்று பிரதமர் மோடி கூறுவார். அதிகாரத்துக்கு வந்தவுடன், அவமதித்தவர்களின் செல்போனை ஒட்டுக்கேட்பது, பழிவாங்குவது போன்றவற்றைச் செய்தல் கூடாது. ஓர் அரசியல்வாதிக்கு பழிவாங்கும் போக்கு இருக்கலாம்; ஆனால், ஒரு தலைவனுக்கு அது இருத்தல் கூடவே கூடாது.

இன்றைய அரசியல் கட்சித் தலைவர்கள் எதனையும் செய்கின்றனர். தமிழகத்தில் ஒரு கட்சித் தலைவர் மாடுகளின் முன்பாக பேசுகிறார். மாடுகளெல்லாம் வாக்குரிமை கேட்கிறதா? இன்னொருவர் மரம் ஏறுகிறார் என்று தெரிவித்தார்.

summary

BJP Leader Annamalai slams new politicians who wish to become to power in fast track

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.