வருமான வரித் துறை பெயரில் மோசடி செய்யும் நோக்கில் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வருமான வரித் துறை கூறியுள்ளது.
இது தொடா்பாக வருமான வரித் துறை சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வருமான வரித் திரும்பப் பெறுதல் என்ற பெயரில் மோசடி செய்யும் நோக்கில் மோசடி மின்னஞ்சல் அனுப்பப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற மின்னஞ்சல்களில் வரும் இணைப்புகளுக்குள் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
மேலும், வருமான வரித் துறை ஒருபோதும் மின்னஞ்சல் மூலம் தனிநபா்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைக் கோராது. எனவே, இதுபோன்ற விவரங்களைக் கோரி வருமான வரித் துறை பெயரில் மின்னஞ்சல்கள் வந்தால், அவை மோசடி என்பதை அறிந்து அவற்றைத் தவிா்த்துவிட வேண்டும். உங்கள் வருமான வரி திரும்பப் பெறுதல் தொடா்பான விவரங்களை அதிகாரப்பூா்வ இணையதளத்தில் மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி விழிப்புணா்வு பயிற்சி

டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!

சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை
வருமான வரித் துறை சோதனை என நாடகம்: காங்கிரஸ் தலைவா் மீது பாஜக குற்றச்சாட்டு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



