மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதி

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Elderly man washed away by overflowing Mettur Dam
முதியவரைக் காப்பாற்றும் மீனவர்கள்.
Published on
Updated on
1 min read

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேட்டூர் அணையின், நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவான 120 அடியை ஞாயிற்றுக்கிழமை எட்டியது. காலை 8 மணிக்கு உபரி நீர் திறப்பதாக நீர் வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் 8 மணிக்கு திறக்கப்பட்டது.

இதனால் பெரியார் நகர் கால்வாயில் நின்று கொண்டிருந்த முதியவர் சடையன் (60) நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்ட அருகில் இருந்த மீனவர்கள் ஒடிச் சென்று முதியவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

மழைக்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

ஆபத்தான நிலையில் உள்ள முதியவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக முதியவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

Summary

An elderly man who was swept away by the water of Mettur Dam has been admitted to a government hospital in a critical condition.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com