நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் 12 பேருக்கு எதிராக நகராட்சித் தலைவர் அளித்த புகாரை 6 வாரங்களில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க நீலகிரி ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நகராட்சித் தலைவர் சிவகாமி தாக்கல் செய்த மனுவில், நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் கடந்த 3 கூட்டங்களில் பங்கேற்கவில்லை. ஒரு பெண் கவுன்சிலர் அனுமதி பெறாமல் வெளிநாடு சென்றுவிட்டார்.
உள்ளூர் பிரச்னைகளை கண்டறிந்து, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு கவுன்சிலரின் கடமை. இந்த கடமையை புறக்கணித்த இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகாரை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கு நீதிபதி என்.மாலா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அளித்த புகாரை 6 வாரங்களில் பரிசீலித்து, சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க, நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரரின் விண்ணப்பத்தில் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதினால், 12 கவுன்சிலர்களும் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
Summary
Chennai High Court orders Nilgiris Collector to act on complaint against 12 Nelliayalam councillors within 6 weeks.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










