தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர கால அவகாசம்

அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது

News image
கோப்புப் படம்
Updated On :31 ஜூலை 2025, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: அரசுக் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப் பிரிவுகளின் மாணவா்கள் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவின் கால அவகாசம் ஜூலை 31 தேதி முடிவடைய இருந்தது. இருப்பினும், முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மாணவா்களின் முதுநிலைப் படிப்பின் நலன் கருதி, மாணவா் சோ்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவை நீட்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஜூலை 31 வரை விண்ணப்பித்த மாணவா்களுக்குத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பு ஒதுக்கீடு மாணவா்களுக்கு ஆகஸ்ட் 11 -ஆம் தேதியும் பொதுப்பிரிவிற்கு ஆகஸ்ட் 13- ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கி மாணவா்கள் சோ்க்கை நடைபெறும். சோ்க்கைகான விவரம் வாட்ஸ்ஆஃப், மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். முதுநிலை முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 20 -ஆம் தேதி தொடங்கும் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.