தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலளித்துள்ளார்.
கனிமொழி எம்.பி.
கனிமொழி எம்.பி.
Published on
Updated on
1 min read

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

தங்கள் சொந்த மாநில நலன்களை கைவிட்டு, தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக தில்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவருக்கு, எங்களுக்குப் போதிக்க எந்த உரிமையும் இல்லை.

தமிழ்நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் - நமது விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள்.

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

அச்சுறுத்தல் எங்கள் வீட்டு வாசலில் உள்ளது. உங்கள் தில்லி எஜமானர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் எடுபடாது என்று அவர்களிடம் சொல்லுங்கள். எழுதப்பட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு தீர்வைத் தவிர வேறு எதையும் நாங்கள் கோருவதில்லை.

நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அரசியலமைப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை நாங்கள் குரல் எழுப்புவோம்.

மாநில நலனை நீங்கள் விற்றுவிட்டீர்கள். நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com