கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அரசியல், கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம்: தவெக

கூட்டணி குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கருத்து.

News image

தவெக தலைவர் விஜய்

கோப்புப்படம்

Updated On :30 ஜூன் 2025, 2:36 pm

DIN

அரசியல் எதிரி, கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம் என தமிழக வெற்றிக்கழக மாநில கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை ஒட்டி இன்று(ஜூன் 30) சேலம் மாவட்ட தவெக சார்பில் சேலம் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருள்ராஜ் கலந்துகொண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான போர்வைகளை வழங்கினார். முன்னதாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அருள்ராஜ், ”தமிழகம் முழுவதும் தளபதியின் கோட்டையாக மாறி வருகிறது. அதில் சேலம் இரும்புக் கோட்டையாக உள்ளது. சேலத்தைப் பொறுத்தவரை மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் வந்து கொண்டிருந்தாலும் சேலத்தில் பல வார்டுகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது.

பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டுகள் முன்பு தொடங்கியும் இதுவரை சீர் செய்யவில்லை; இதனால் வீட்டிற்கு கழிவு நீர் வரும் சூழ்நிலை உள்ளது.

சேலம் பல்வேறு நகரங்களை இணைக்கும் சாலையாக உள்ளது; ஆனால் இதுவரை தொழில் வளர்ச்சி இல்லை. ஆண்ட இரு கட்சிகளும் சேலத்தில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் சேலம் தலைசிறந்த மாவட்டமாக மாற்றப்படும்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், "தமிழகம் முழுவதும் தளபதி சுற்றுப்பயணம் குறித்து வருகின்ற 4 தேதி நடைபெற நடைபெற உள்ள செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக கட்சி, சின்னம் இன்னும் விண்ணப்பிக்கவில்லை ; விண்ணப்பித்தவுடன் தெரிவிக்கப்படும். தளபதி விஜய் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார். இனிமேல் மக்களை சந்திப்பார்.

தளபதி விஜய் வெளியே வராததற்கு காரணம் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பயம்தான் ; காவல்துறை பாதுகாப்பு அளித்தால் விஜய் வருவார். அரசியல் எதிரி, கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம்” என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.