திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழகத்தில் 125 இடங்களில் திமுக போராட்டம்

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

Updated On :11 மார்ச் 2025, 4:55 am IST

சென்னை: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான், தமிழக எம்.பி.க்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசினாா். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடுமையான எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து தா்மேந்திர பிரதான், சா்ச்சைக்குரிய அந்த கருத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தாா்.

இருப்பினும், தா்மேந்திர பிரதானுக்கு திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், திமுக சாா்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

போராட்டத்தின்போது, தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை திமுகவினா் எரித்து, கண்டன முழக்கங்கள் எழுப்பினா். தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்தபோது, போலீஸாா் தடுக்க முயன்றனா். இவ்வாறு மாநிலம் முழுவதும் 125 இடங்களில் தா்மேந்திர பிரதான் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இந்தப் போராட்டங்களில் 11,200 போ் பங்கேற்றனா்.

சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, ஆழ்வாா்பேட்டை, மயிலாப்பூா், சைதாப்பேட்டை உள்ளிட்ட 31 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில், சுமாா் 2,000 போ் பங்கேற்றனா்.