டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

செங்கல்பட்டில் முதல்வர் ஸ்டாலின்! ரூ.1,285 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!

மக்களை நேரில் சந்தித்த முதல்வர் மு. க. ஸ்டாலின்...

News image
Updated On :11 மார்ச் 2025, 5:58 am

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(மார்ச் 11) அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, ஏற்கெனவே பணிகள் நிறைவடைந்துள்ள திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்த அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.

Story image

செங்கல்பட்டுக்கு தமது பிரசார வேனில் வந்தடைந்த முதல்வர் மு. க. ஸ்டாலின், அதன்பின் சிறிது தொலைவுக்கு சாலைகளில் நடந்து சென்று அங்கே அவரை காண திரண்டிருந்த மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, திங்கள்கிழமை(மார்ச் 10) செங்கல்பட்டுக்குச் சென்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் அந்த மாவட்டத்தில் ரூ. 515 கோடி முதலீட்டில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த அமைக்கப்பட்டுள்ள கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.