தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

உள்ளாட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம்! விரைவில் சட்டம்!

தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26 தொடர்பாக...

News image
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
Updated On :14 மார்ச் 2025, 6:16 am

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.

அப்போது மாற்றுத் திறனாளிகள் நலத்துறை தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

முக்கிய அறிவிப்புகள்:

மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ. 1,433 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 மாற்றுத் திறனாளி ஊழியர்களை பணியமர்த்தி இருந்தால், அந்த நிறுவனத்துக்கு மாதம்தோறும் ஒரு மாற்றுத்திறனாளி பணியாளருக்கு ரூ. 2,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நடப்பு சட்டப்பேரவை தொடரில் சட்டம் இயற்றப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.