பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

நடிகை பிந்து கோஷ் காலமானார்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வந்த நடிகை பிந்து கோஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 78.

பிந்து கோஷ் (முதல் படம்: கோழி கூவுது படத்தில்...) - படம் | எக்ஸ்

Published On :16 மார்ச் 2025, 9:37 pm IST

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வந்த நடிகை பிந்து கோஷ் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 78.

1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தவர் பிந்து கோஷ்.

சென்னையில் வசித்துவந்த இவர், கடந்த சில நாள்களாக வயது மூப்பு சார்ந்த உடல் பிரச்னையால் அவதியுற்றுவந்தார். மருத்துவ செலவுக்குக் கூட போதிய பணமின்றி உதவி நாடிய பிந்து கோஷுக்கு பிரபலங்கள் பலர் உதவிக்கரம் நீட்டினர்.

இதனிடையே இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார். இதனை அவரின் மகன் உறுதிப்படுத்தியுள்ளார். அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்

தமிழ் சினிமாவில் 100க்கும் அதிகமான படங்களில் பிந்து கோஷ் நடித்துள்ளார். மனோரமா, கோவை சரளா வரிசையில் குறிப்பிடத்தகுந்த பெண் நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்றார்.

விமலா என்னும் இயற்பெயர் கொண்ட இவர், முதல்முறையாக நடிகர் கமல்ஹாசனின் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடனக் கலைஞராக அறிமுகமானார். இதில் எல்லோரும் நலம் வாழ.. என்ற பாடலில் கமல்ஹாசனுடன் நடினமாடியிருப்பார்.

1982-ல் பிரபு நடித்த கோழி கூவுது படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தூங்காதே தம்பி தூங்காதே, மங்கம்மா சபதம், விடுதலை, நீதியின் நிழல், டெளரி கல்யாணம், சூரக்கோட்டை சிங்கக்குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.