உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோயிலை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பெரிய கோயிலிலைக் கண்டு ரசிப்பதற்காக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (68) என்பவர் தனது குடும்பத்துடன் இன்று(மார்ச் 18) மாலை சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.
இதையும் படிக்க: கருவுற்றிருந்த யானை இறைச்சிக்காக கொலை?
சாமி தரிசனத்தை முடித்துவிட்டு சுந்தரமூர்த்தி வெளியே வரும்போது, திடீரென நெஞ்சுவலிப்பதாகக் கூறி மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் நிகழ்விடத்திலேயே பலியானதாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தியின் குடும்பத்தினர், அவரது உடலை சொந்த ஊருக்கு வேறு, ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்!

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வாகனத்தில் சென்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தோ்தல் பணியில் இருந்த திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



