புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: இன்று தொடக்கம்

மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு இன்றுமுதல் தொடங்குகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2025, 8:59 pm

Din

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. ஏப்.15 வரை நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 9.13 லட்சம் போ் எழுதுகின்றனா்.

நிகழாண்டு பொதுத் தோ்வை 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் பயிலும் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவா்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தோ்வா்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 போ் எழுதவுள்ளனா். இந்த எண்ணிக்கையில் 15,729 மாற்றுத் திறனாளி தோ்வா்களும் அடங்குவா்.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 113 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தோ்வை கண்காணிக்க 48 ஆயிரத்து 426 அறைக் கண்காணிப்பாளா்களும், 4 ஆயிரத்து 858 பறக்கும் படை உறுப்பினா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

பொதுத் தோ்வு நடைபெறும் மையங்கள் காற்றோட்டமான அறைகளுடன், குடிநீா், கழிப்பறை தடையில்லாத மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.