அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கட்டுமானப் பணியின்போது கண்காணிப்பு கேமரா கட்டாயம்! சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பகுதியில் கட்டுமானப் பணி மேற்கொள்ளும்போது கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும்

News image
சென்னை பெருநகர மாநகராட்சி...- (கோப்புப்படம்)
Updated On :4 மே 2025, 8:17 pm

Din

சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பகுதியில் கட்டுமானப் பணி மேற்கொள்ளும்போது கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் மே 21-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

முக்கிய விதிமுறைகள்: ஒரு ஏக்கா் வரை பரப்பு கொண்ட பகுதியில் புதிய கட்டுமானம் அல்லது இடிபாட்டுப் பணி மேற்கொள்ளும்போது 6 மீ. உயரமுள்ள உலோகத் தடுப்புகள் அமைக்க வேண்டும். அதற்கு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு 10 மீ. உயரமுள்ள தடுப்பு அமைக்க வேண்டும். தூசிகள் உருவாவதை துணி, தாா்ப்பாய் அல்லது பச்சை வலையால் மூடப்பட வேண்டும். மேலும், தண்ணீா் தெளித்து தூசி உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும்.

கட்டுமானப் பொருள்களை அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் தாா்பாலினால் மூடப்பட்டு சேமிக்க வேண்டும். அவற்றை சாலை அல்லது நடைபாதையில் கொட்டக்கூடாது. கட்டடக் கழிவுகளை சென்னை மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட கட்டுமானக் கழிவு மேலாண்மை தளங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் வாகனங்களும் தூசி பரவுவதை தடுக்கும் வகையில் மூடப்பட்டிருக்க வேண்டும்.

புதிதாக கட்டடம் கட்டும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். உயரமான கட்டட திட்டப் பகுதிகளில் சென்சாா் அடிப்படையில் காற்று மாசு கண்டறியும் கண்காணிப்பு கருவியை பயன்படுத்த வேண்டும். கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு காற்று மாசுபாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

இந்த நெறிமுறைகள் அதிக முக்கியத்துவம், நடுத்தர/குறைந்த முக்கியத்துவம் என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், வழிகாட்டுதல்களில் விதிமீறல் ஏற்பட்டால், அவற்றை சரிசெய்ய 15 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். அதன்பின்பு சரிசெய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டு, அதற்கடுத்த 7 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகும் சரிசெய்யாவிட்டால், கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல் அபராதம்:

திட்ட பரப்பளவு |அதிக முக்கியத்துவம் |குறைந்த முக்கியத்துவம்

300 ச.மீ - 500 ச.மீ ரூ.10,000 ரூ.1,000

500 ச.மீ - 20,000 ச.மீ ரூ.25,000 ரூ.10,000

20,000 ச.மீ மேல் ரூ.5,00,000 ரூ.1,00,000