விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: 6 மத்திய சிறைகளில் 100% தேர்ச்சி!

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தொடர்பாக...

News image
கோப்புப் படம்
Updated On :16 மே 2025, 8:33 am

DIN

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 16) வெளியான நிலையில், மதுரை, சேலம் உள்பட 6 மத்திய சிறைகளில் தேர்வெழுதிய 100% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 16) காலை வெளியானது.

சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார்.

Story image
Story image

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரை, சேலம் உள்பட 6 மத்திய சிறைகளில் தேர்வெழுதிய 100% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 237 சிறைக் கைதிகளில் 230 பேர் (97.05%) தேர்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை மத்திய சிறையில் தேர்வெழுதிய 65 சிறைக் கைதிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல, சேலம் மத்திய சிறையில் தேர்வெழுதிய 25 சிறைக் கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாளையங்கோட்டை சிறைக் கைதி சக்திவேல் மற்றும் சேலம் சிறைக் கைதி கோபி ஆகிய இருவரும் அதிகபட்சமாக 412 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.