அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உதவிப் பேராசிரியர்கள் பணிக்கான போட்டித் தேர்வு: விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படவுள்ளனர். இதற்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய நவ.10 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் நவ.13-ஆம் தேதிக்குள் திருத்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நவ.13 வரை தேர்வர்களின் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கும்.

மேலும், இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே திருத்தம் செய்ய அனுமதிக்கப்படும்.

தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், கடைசிப் பக்கத்தில் உள்ள "சமர்ப்பி' ( நன்க்ஷம்ண்ற்) பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை உறுதி செய்ய வேண்டும்.

உறுதி செய்யவில்லை எனில், அவரது விண்ணப்பம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

திருத்தம் செய்யும்போது மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது.

மேலும், நவ.13-ஆம் தேதிக்கு பின்னர் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது.

இறுதியாக பணிஅனுபவ சான்றிதழ்களை (பிற்சேர்க்கை மூலம்) நவ.30-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.