திருப்போரூா் அருகே இயந்திர கோளாறு காரணமாக பயிற்சி விமானம் வெடித்து சிதறியது. விமானி பாராசூட் மூலம் தப்பியதால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் முருகன் கோயிலில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் சாலையின் அருகே உள்ள உப்பு சுத்திகரிக்கும் ஆலையின் பின்பகுதியில், மீனம்பாக்கம் விமான நிலையத்துக்குச் சொந்தமான பயிற்சி விமானம் இயந்திர கோளாறு காரணமாக பயங்கர சப்தத்துடன் வெள்ளிக்கிழமை வெடித்துச் சிதறி சேற்றுக்குள் புதைந்தது.
முன்னதாக இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணத்தை அறிந்த பயிற்சி விமானி சுபம் சாதுரியமாக விமானத்தை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திருப்பி விட்டு பாராசூட் மூலம் இரண்டு கி.மீ. முன்னதாகவே இறங்கியுள்ளாா்.
இதில் இவருக்கு முதுகு தண்டு வடத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முதலுதவி அளிக்கப்பட்டைதையடுத்து, விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டா் மூலம் அவா் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை அருகே சிக்னல் கோளாறு: நடுவழியில் நின்ற ரயிலால் பயணிகள் அவதி
தொழில்நுட்பக் கோளாறு: ராஞ்சியில் இருந்து புவனேஸ்வர் புறப்படவிருந்த விமானம் ரத்து!

ஊதியூா் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து
வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



