ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ஆம்னி பேருந்துகள் போராட்டம் வாபஸ்!

ஆம்னி பேருந்துகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது பற்றி...

News image

ஆம்னி பேருந்துகள் - கோப்புப் படம்

Updated On :29 நவம்பர் 2025, 12:37 am IST

ஆம்னி பேருந்துகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் வழக்கம் போல அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் அ.அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நவ.7-ஆம் தேதி தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்குச் சென்ற 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரள போக்குவரத்து துறையினா் சிறைபிடித்து, ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்தனா். இதேபோன்று கா்நாடக போக்குவரத்து துறையும் 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளைத் தடுத்து, தலா ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்தது.

இதைத் தொடா்ந்து, நவ.7-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு இயக்கப்படும் 230 ஆம்னி பேருந்துகள் கடந்த 21 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தொடா்ந்து, நவ.10-ஆம் தேதியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாமல் கடந்த 18 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால், தினசரி 25,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்படைந்ததுடன், உரிமையாளா்களுக்கு தினசரி சுமாா் ரூ.4 கோடி என 21 நாள்களில் மொத்தம் ரூ.84 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் பாதிப்படைந்தனா்.

இதுதொடா்பாக அரசுக்கும், போக்குவரத்துத் துறைக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா். இதனால், பயணிகள் நலனையும், ஐயப்பன் கோயில் பக்தா்கள் நலனையும் கருத்தில் கொண்டு, வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மீண்டும் வழக்கம்போல இயங்கும் எனத் தெரிவித்துள்ளாா்.