தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

News image

கோப்புப்படம்.

Updated On :17 செப்டம்பர் 2025, 3:22 am IST

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை உள்ளிட்ட விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னையிலிருந்து மதுரை, செங்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாகர்கோவில்-தாம்பரம்-நாகர்கோவில்: நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் (06012) செப். 28, அக். 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும். மறுவழித்தடத்தில் தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) செப். 29, அக். 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி: திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06070) செப். 25, அக். 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) திருநெல்வேலியிலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சென்று சேரும். மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) சென்னையிலிருந்து செப். 26, அக். 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகள்) நண்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, புதுக்கோட்டை காரைக்குடி தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாகர்கோவில்- சென்னை: நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06054) செப். 30, அக். 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) நாகர்கோவிலிலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்று சேரும். மறுவழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) அக்.1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னையிலிருந்து காலை 4.15 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

இந்த ரயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தூத்துக்குடி - சென்னை: தூத்துக்குடி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06018) தூத்துக்குடியிலிருந்து செப். 29, அக். 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை சென்று சேரும். மறுவழித்தடத்தில், சென்னை எழும்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06017) செப். 30, அக். 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) சென்னை எழும்பூரிலிருந்து பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

செங்கோட்டை- சென்னை: சென்னை சென்ட்ரல் - செங்கோட்டை சிறப்பு ரயில் (06121) செப். 24, அக். 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னையிலிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுவழித்தடத்தில் செங்கோட்டை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06122) செப். 25, அக். 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) செங்கோட்டையிலிருந்து இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்று சேரும்.

இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (செப். 17) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

போத்தனூர் சிறப்பு ரயில் : சென்னை சென்ட்ரல் - போத்தனூர் சிறப்பு ரயில் (எண் 06123) செப். 25 , அக். 2 , 9 , 16 , 23 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், போத்தனூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06124) செப்.26 ,அக். 3 , 10 , 17 , 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், வடகோவை, கோவை ஆகிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.